அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டிகள் திகழ்கின்றன. அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவுபெற்ற நிலையில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு துவங்கவுள்ளது. மாலை 4 மணிவரை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்து 400 காளைகளை 848 மாடுபிடி வீரர்கள் அடக்கவுள்ளனர். போட்டியை காண ஏராளமானோர் வருவார்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version