ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பிப்.1-ம் தேதி வரை தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பிப்ரவரி 1 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தங்களை கைது செய்ய தடை விதிக்கக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இருவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், வழக்கை பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த பாட்டியாலா நீதிமன்றம், அன்று வரை இருவரையும் கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version