ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்!

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம் அதிமுக ஒன்றிய குழு
பெருந்தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த அதிமுக கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் அதிமுக கவுன்சிலர்களை மதிக்காமல் திமுகவினருக்கு முக்கியத்துவம் தருவதாக தெரிவித்தனர். மேலும், கோடுவெள்ளி ஊராட்சியில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டுமென அதிமுக கவுன்சிலர் குழந்தைவேலு கேட்டுக்கொண்டார்.

Exit mobile version