அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்த்தின் உத்தரவை ஏற்றுக்கொள்ளும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கவில்லை என்றும் கூறியது.இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்பதால், பொதுக்குழு மூலம் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் அதனை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய், ஆகியோர் உத்தரவிட்டனர்.

Exit mobile version