ஜூட் விடும் மழை.. சுட்டெரிக்க போகும் வெயில்.. இன்றிலிருந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த வாரம் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக பல இடங்களில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. வெயிலில் இருந்து நம்மை காக்க மழை வந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் இருந்த மக்களுக்கு தற்போது அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம் இன்று தொட்டு மே 4 லிருந்து மே 28 வரை அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இருக்கப் போகிறது.

இந்த காலக்கட்டத்தில் மக்கள் நிறைய நீர் அருந்த வேண்டும். தர்பூசணி, கிர்ணி, அத்தி போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version