தடைகளைத் தாண்டி பொதுச்செயலாளர் ஆகியுள்ளார் எடப்பாடி கே பழனிசாமி – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு பின்னால்  அவர்களின் வழித்தடத்தில் வந்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் எளியத் தொண்டராக இருந்து இந்த மாபெரும் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்துள்ளார். அதிமுக என்பது மிகச்சரியாக வலுவாக கட்டமைக்கப்பட்ட கட்சியாகும். எடப்பாடி பழனிசாமி அவர்கள் தக்க வியூகம் அமைத்து எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறம்பட செயல்படுவார் என்கிற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
YouTube video player

Exit mobile version