50000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிமுக வெற்றி வாகை சூடும்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காப்பாளங்கரை அடுத்த கோப்பனார் புதூர் பகுதியில் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்தாண்டு காலத்தில் எந்தவித புதிய வரிகளும் விதிக்காமல், மக்களின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்த இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும் என்றார். இதுதான் தமிழக மக்களுடைய தீர்மானமான முடிவு என்றும், இதை மாற்ற யாராலும் முடியாது எனவும் தெரிவித்தார்.

Exit mobile version