எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் – எம்பி தம்பிதுரை!

தமிழகத்தில் திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவின் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்டக் கழக செயலாளர் எம்.கே அசோக் தலைமையில் நடைபெற்றது.Chennai: Lok Sabha deputy speaker Thambi Durai admitted in hospital - Oneindia News

இக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய கழக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், குடும்ப அரசியலின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இதுதான் அதிமுகவின் கொள்கை என்றும் பேசினார்.நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரசும், திமுகவும்தான் என்று குற்றம்சாட்டிய கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை, தற்போது நீட் தேர்வை ஒழிக்கிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தமிழக மக்களை விடியா அரசு ஏமாற்றி வருவதாகவும் விமர்சித்தார்.

Exit mobile version