அமைச்சர் மா.சு உரையைப் புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு..!

சட்டப்பேரவையைப் பொறுத்தமட்டில் திமுக சார்பாகவே எல்லா விசயங்களும் நடந்தேறுகின்றன. கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளை நேரலையில் ஒளிபரப்பாமல் அமைச்சர்களின் பதில்களை மட்டும் ஒளிபரப்பு செய்கிறார்கள். இது போன்ற பல அராஜகங்கள் சட்டபேரவையில் நடக்கின்றன. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய சட்ட சபையில் ஜனநாயக முறைப்படி இந்த சட்டசபை நடைபெறவில்லை. மேலும் எட்டு கோடி மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு வெறும் பதினைந்து நிமிடங்களே அனுமதி தருகிறீர்கள் என்பது போன்ற பலக் குற்றச்சாட்டுகளை வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் உரையைப் புறக்கணித்துவிட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Exit mobile version