அதிமுகவில் இணைவதற்கான உறுப்பினர் படிவம் விநியோகம்.. துவங்கிவைத்தார் பொதுச்செயலாளர்..!

அதிமுகவில் இணைவதற்கான உறுப்பினர் படிவம் மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் படிவங்கள் புதுப்பிக்கும் படிவமும் இன்று விநியோக்கிக்கப்படுகிறது. இப்படிவத்தை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வழங்கி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர், சென்னை அதிமுக அலுவலகத்தில் உள்ள புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பிறகு விண்ணப்பத்தினை பொதுச்செயலாளர் அவர்கள் விநியோகம் செய்தார். முதல் ஆளாக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் விண்ணப்பத்திற்கான தொகையை செலுத்தி விண்ணப்பத்தினைப் பெற்றார். ஒவ்வொரு படிவத்தில் பத்து உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளலாம். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செங்கொட்டையன், முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் என்று தொடர்ந்து பல முன்னாள் அமைச்சர் பெருமக்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் என்று தொடர்ந்து அனைவரும் விண்ணப்ப படிவத்தை பெற்று வருகின்றனர்.

Exit mobile version