அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை: வதந்திகளை நம்பவேண்டாம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நிலை கோளாறு காரணமாக சென்னையில் உள்ள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலவத் தொடங்கியுள்ளன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த தகவலில்,  “அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

எனவே, பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

Exit mobile version