ஐடி பிரிவு நிர்வாகி கைது..கொதிக்கும் அதிமுகவினர்!

முன்னள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியை சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுகவின் ஐடி பிரிவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, அதிமுகவினர் வேதாரண்யம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் 22 தற்காலிக தூய்மை பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் நீக்கியதை கண்டித்து, கடந்த மூன்றாம் தேதி 8 நகராட்சி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஆதரித்து நகராட்சி வாயிலில் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ் மணியன் பேட்டியளித்தார். இந்த பேட்டியை அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த கவிதரன் என்பவர், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து திமுகவினர் காவல்நிலையத்தில் பொய் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதனை வைத்து வேதாரண்யம் காவல் துறையினர் அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த கவிதரனை கைது செய்துள்ளனர். இதனை கண்டிக்கும் வகையில் அதிமுகவினர் வேதாரண்யம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version