ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் நில விவகாரம்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கவனயீர்ப்புத் தீர்மானம்..!

ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு தேவையான நிலத்தை வனத்துறை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.


சட்டப்பேரவையில் இன்று நேரம் இல்லா நேரத்தில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட அருள்மிகு பன்னாரி அம்மன் திருக்கோவிலுக்கு வன நிலத்தை அளிக்க வேண்டும் என்று பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஏற்கனவே இந்த கோவிலின் திருப்பணிகளுக்கு 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கோவிலின் மேம்பாட்டு பணிக்கு வனத்துறை வன நிலத்தை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Exit mobile version