காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த நடிகர் விஷால் கைது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயற்சித்த போது, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பணி செய்ய விடாமல் தடுத்ததால், நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சுமார் 7 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக விஷால் மீது புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சங்க தலைவர் விஷால் விளக்கம் அளிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சங்க உறுப்பினர்கள் நேற்று போட்டு சாவியை அருகேயுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், போலீசாரின் தடுப்பையும் மீறி விஷால் இன்று பூட்டை உடைத்து அலுவலகத்திற்குள் நுழைய முயன்றார். இந்நிலையில் போலீசாரின் அறிவுறுத்தலையும் மீறி நடிகர் விஷால் தகராறில் ஈடுபட்டார். இதனைதொடர்ந்து விஷாலை கைது செய்த போலீசார் தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்

Exit mobile version