இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்!

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் பசுமலையைச் சேர்ந்த இயக்குனரும், நடிகருமான மாரிமுத்துவுக்கு, மனைவி பாக்கியலட்சுமி, அகிலன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மகள்கள் உள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த அவர், தமிழ் சினிமாவில் 2008-ம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த புலிவால் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இதுமட்டுமல்லாமல் அரண்மனைக்கிளி, பரியேறும் பெருமாள், கொம்பன், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் நடித்து வந்துள்ளார். இந்நிலையில், விருகம்பாக்கம் உள்ள அவரது இல்லத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தனது தெளிவான பேச்சால், ரசிகர்களை கவர்ந்த மாரிமுத்துவின் இழப்பு அவரது குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும், திரைதுறையினருக்கும் பேரிழப்பாகும்.

Exit mobile version