நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84 . நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை இல்லத்தில் மகன் அஜித் குமாருடன் வசித்து வந்தார். பக்கவாத நோயால் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி, இன்று காலை 4:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் உயிரிழந்தார். அஜித்குமாரின் தந்தையின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் காலை 10 மணி அளவில் தகனம் செய்யப்படவுள்ளது.

அவரது மறைவினை ஒட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியினைத் தெரிவித்துள்ளார்.

அன்புச்சகோதரர், நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி. சுப்ரமணியம் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தந்தையை பிரிந்து வாடும் திரு.அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Exit mobile version