தமிழகத்திற்கு 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வருகை

தமிழகத்திற்கு 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும். ஆனால், 150 கம்பெனி வீரர்கள் மட்டுமே தமிழகத்திற்கு வர உள்ளனர் என்று தெரிவித்தார். இவர்கள் வருகிற 16ம் தேதிக்குள் தமிழகம் வருவார்கள் என்றும் தெரிவித்தார்.

துணை ராணுவ வீரர்களை எங்கெங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version