தமிழக அரசின் ஆவின் நிறுவனம் புதிய சாதனை!

ஒரே நாளில் 35 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குநர் காமராஜ் பேசுகையில், தமிழகத்தின் பால் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, 1981-ஆம் ஆண்டு தனது சேவையை ஆவின் நிறுவனம் தொடங்கியதாக குறிப்பிட்டார்.

நாள்தோறும் கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து விநியோகம் செய்து வருவதாக அவர் கூறினார்.

அதிகபட்சமாக கடந்த வாரம் 35 லட்சத்து 23 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்து இருப்பதாகவும், தமிழகத்தின் பால் தேவையில் 85 சதவீதத்தை ஆவின் பூர்த்தி செய்து வருவதாகவும் காமராஜ் தெரிவித்தார்.

Exit mobile version