குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவன்!

புதுச்சேரி அருகே வில்லியனூர் – பத்துக்கண்ணு சாலை, கடந்த 7 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சேந்தநத்தம் பகுதியை சேர்ந்த முதியவர் சேகர், பைக்கில் செல்லும் போது பள்ளத்தில் விழாமல் இருக்கே பிரேக் போட்டபோது, பின்னால் வந்த பைக் மோதியது. இந்த விபத்தில், முதியவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், 8ம் வகுப்பு படிக்கும் அவரது பேரன் மாசிலாமணி, தாத்தா விழுந்த பள்ளத்தில், மற்றவர்கள் யாரும் விழுந்து அடிபடாமல் இருக்கும் நோக்கில், அண்ணனுடன் சேர்ந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். சிறுவனின் செயலை பார்த்து, வாகன ஓட்டிகள் பலரும் பாராட்டி சென்றனர்.

Exit mobile version