பீகாரில் சாலையோரப் பள்ளத்தில் இறங்கிய பள்ளி பேருந்து 

பீகார் தலைநகர் பாட்னாவில் சாலையோரப் பள்ளத்தில் பள்ளிப் பேருந்து இறங்கிய நிலையில் அதிலிருந்த மாணவர்கள் 5 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த பள்ளிப் பேருந்தை ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் பேருந்து பள்ளத்தில் இறங்கியது. நல்வாய்ப்பாக அங்கிருந்த நீர்நிலையில் அது விழவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அதிலிருந்த மாணவர்கள் 5 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். அதன்பின் கிரேன் உதவியுடன் பள்ளிப் பேருந்தும் மீட்கப்பட்டுச் சாலையில் நிறுத்தப்பட்டது.

Exit mobile version