பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி

கடலூர் மாவட்டம் குமாரக்குடியில் பதிமூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமாரக்குடி கிராமத்தில் சிங்காரம் என்பவரது 13 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த பாலகுருமகன்,திலகர், ஜெய்சங்கர் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நடந்த சம்பவத்தை பெற்றோருக்கு மறைத்த சிறுமி, தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. தற்போது அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட திலகரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Exit mobile version