"கொரோனா அச்சம்;தற்கொலைகளை தடுக்கவும்"

கொரோனா அச்சத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்க, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தகுந்த ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று, திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா அச்சத்தால் ஏற்படும் தற்கொலையத் தடுக்க வலிறுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் கல்லுமேட்டை சேர்ந்த தாய் மற்றும் மகன், கொரோனா அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் பூரண குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை அறிந்து, அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்கொலைகளை தடுக்க ஆலோசனைகள் வழங்குமாறும், நோயின் தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version