புயலால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகம் -ஆனந்தம் பவுண்டேசன்

கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க தயாராக உள்ளதாக ஆனந்தம் என்ற தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனந்தம் பவுண்டேசன் எனும் தனியார் தொண்டு நிறுவனம், சென்னை கே.கே.நகரில் இயங்கி வருகிறது. கல்வியில் பின்தங்கிய ஏழை-எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி பயில, இந்த தொண்டு நிறுவனம் உதவி செய்து வருகிறது. இந்நிலையில், கஜா புயல் மற்றும் மழையால், பாடப் புத்தகங்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்க, இந்த தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது.

தேவைப்படும் புத்தகங்களின் விவரங்களை தெரிவித்தால், 10 நாட்களில் புதிய புத்தகங்கள் வழங்க உள்ளதாகவும் ஆனந்தம் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Exit mobile version