சென்னை போரூர் அருகே 2 வயது மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்

சென்னை போரூர் அருகே, மன உளைச்சலில் 2 வயது மகனை கொலை செய்து விட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்த சம்பவம் குறித்த செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

சென்னை பேருரை அடுத்த தெள்ளியார் அகரம் தெருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ். பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி . இவர்களுக்கு பிரதீப் , சக்திவேல் என இரண்டு மகன்கள் உள்ளனர் .மூத்த மகனான பிரதீப்புக்கு வாய் பேச முடியாத காது கேட்காமல் இருந்து வந்தது.இது சம்பந்தமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவனுக்கு பேச்சு தெரபி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ 3 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். இந்த நிலையில் இளைய மகனான சக்திவேலை மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவனுக்கும் வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இதை நிவர்த்தி செய்ய முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தனது இரண்டு மகன்களுக்கும் வாய் பேச முடியாத காது கேட்க முடியாமல் இருப்பதால் அஸ்வினி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மூத்தமகன் பிரதியை அவரது பாட்டி வீட்டிற்கு கணவருடன் அனுப்பி வைத்தார். மகேஷ் தனது மகனை அழைத்து சென்று அவரது பாட்டி வீட்டில் விட்டு விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டிற்குள் தூக்கு போட்டு மனைவி இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று அவரை பார்த்த போது உயிரிழந்த நிலையில் கிடந்தார். பின்னர் கட்டிலில் பார்த்த போது அவரது இளைய மகன் சக்திவேலும் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர் .மேலும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது .2 மகன்களும் காது மற்றும் வாய் குறைபாடுகளுடன் பிறந்ததால் வேதனையடைந்த தாய் மகனை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version