ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் தனியாமங்களத்தில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

மழை வேண்டியும் தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுத்த மாணவ மாணவியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. சின்னமாடு, பெரியமாடு என்ற இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் கொடி மங்களம் ஊரைச் சேர்ந்த காளையும், இரண்டாம் பரிசை கோட்டநத்தம்பட்டியைச் சேர்ந்த காளையும் தட்டிச் சென்றன. இதேபோல் சின்னமாடு பிரிவில் கொடி மங்களத்தை சார்ந்த காளை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. சுற்றிவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வருகை தந்து ரேக்ளா பந்தயத்தைக் கண்டுகளித்தனர்.

Exit mobile version