இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !

புவனகிரி அடுத்த பெரியகுப்பம் பகுதியில் காசிநாதன் என்பவரின் பசு மாட்டை, பொங்கல் பண்டிகையன்று நள்ளிரவில் மர்மநபர்கள் கடத்திச்சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தில் மாட்டை தேடியும் கிடைக்காததால், 3 நாட்களுக்கு பிறகு சாலையோரத்தில் மாட்டின் தலை, தோல் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, மர்ம நபர்கள் பசுமாட்டை கொன்று 250 கிலோ இறைச்சியை விற்றது தெரியவந்தது. பசுமாட்டின் பாலை விற்றுதான் காசிநாதன் குடும்பம் நடத்தி வரும் நிலையில், தற்போது வருமானம் இன்றி தவிப்பதால் அரசு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், மாட்டை இறைச்சிக்காக கொன்றவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Exit mobile version