சென்னையில் குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்த 30 பேர் குறித்து ஆய்வு

சென்னையில் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்த 30 பேர் பட்டியல் குறித்து ஆய்வு செய்து வருவதாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்த 30 பேரில், அலைபேசியின் ஐ.பி முகவரியைக் கொண்டு, 12 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாகக் கூறினார். மேலும், மீதமுள்ளவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்த புகாரை, 75300 01100 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், dccwc.chennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம் எனவும் கூறினார்.

Exit mobile version