சென்னை: கண்டெய்னர் முழுவதும் நிரப்பி கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை அரும்பாக்கத்தில் கன்டெய்னர் லாரி முழுவதும் நிரப்பி கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல். கன்டெய்னர் லாரி மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை அரும்பாக்கத்தில் காலியாக உள்ள ஓரு இடத்தில் கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சரக்கு லாரியில் இருந்து மத்திய அரசு ஸ்டிக்கர். ஒட்டிய கார் உட்பட மூன்று கார்களில் ஏற்றுவதாக அண்ணாநகர் துணை ஆணையர் ஜவகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கிருந்து சிலர் தப்பி ஓடிவிட்டனர்.
அந்த இடத்தில் இருந்த நேபாளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சோனு வயது 35 பிடித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை…

பிடிபட்ட கண்டெய்னர் லாரியில் 53 புல் பாக்ஸ், 60 கோட்டர் பாக்கஸ் பறிமுதல். இவற்றில்
9×53=477 புல்பாட்டில்கள்
48×60=2880 கோட்டர் பாட்டில்கள் பறிமுதல். இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்…

இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுனர் சோனு மட்டும் சிக்கியுள்ளார். மூன்று கார்களில் வந்த நபர்கள் தலைமறைவாகிவிட்டனர். அதே போன்று வேறு யார் யார் இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்து அரும்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

Exit mobile version