பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து

பெரம்பலூர் அருகே சமயபுரம் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரை சேர்ந்த கலியன், பரமேஸ்வரி, காவேரி மருதாம்பாள், சோலையம்மாள் உள்ளிட்ட பக்தர்கள் பலர் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனர். பாடாலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் பக்தர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பெண்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தானநிலையில் உள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version