முழு பைபிளையும் எழுதி 71 வயது பெண்மணி சாதனை

சென்னையில், முழு பைபிளையும் எழுதி 71 வயது பெண்மணி சாதனை படைத்துள்ளார்.

 சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தை சேர்ந்த 71 வயது பெண்மணியான ஆலிஸ் ஜெயசில் மினர்வா செஸ்டர் என்பவர் முழு பைபிளையும் கைகளால் எழுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இதற்காக அவர் 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், கடவுள் மீது கொண்ட பக்தியால் தமிழில் எழுதியதாகவும், தனது பிறந்தநாளில் உலக சாதனை படைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

அவர் எழுதிய பைபிள் ஆனது 1,462 பக்கங்களையும், 45.70 சென்டி மீட்டர் நீளமும், 32 சென்டி மீட்டர் அகலமும், ஆயிரத்து 300 கிராம் எடையையும் கொண்டுள்ளது. கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும், யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இரண்டு நிறுவனங்களும் இதை அங்கீகரித்து பரிசு வழங்கியது.

Exit mobile version