News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

கொரோனா குறித்த WHO-ன் கருத்தால் குழப்பம்!

Web Team by Web Team
June 11, 2020
in Top10, TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
கொரோனா குறித்த WHO-ன்  கருத்தால் குழப்பம்!
Share on FacebookShare on Twitter

கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளிடம் இருந்து பிறருக்கு நோய் பரவுமா, பரவாதா என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

கொரோனா நோயாளிகளில் ஐந்தில் 4 பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை என அண்மையில் ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இத்தகைய நோய் அறிகுறியற்றவர்கள் மூலம் வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.ஆனால், இந்த கருத்திற்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய, உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவு தலைவர் Maria Van Kerkhove, நோய் அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து பிறருக்கு நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக குறைவு என விளக்கம் அளித்தார். பல்வேறு நாடுகளில் இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த கருத்து மருத்துவ உலகில் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அறிகுறி இல்லாத நோயாளிகளிடம் இருந்து கொரோனா பரவாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என, பாரீசை சேர்ந்த மருத்துவர் Gilbert Deray கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த கருத்து ஆச்சர்யம் அளிப்பதாக, லண்டனைச் சேர்ந்த தொற்றுநோய் துறை மருத்துவர் Liam Smeeth கருத்து கூறியுள்ளார். மேலும், 30% முதல் 50% வரையிலான நோயாளிகள் அறிகுறி அற்றவர்களாக உள்ளதாகவும், அவர்களிடமிருந்து அதிகளவில் பிறருக்கு நோய் தொற்று பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு மருத்துவர்களும் இதே போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றன. இருந்தபோதிலும் உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த தலைவர் Maria Van Kerkhove தனது கருத்தில் உறுதியாக உள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அறிகுறி உள்ள நோயாளிகளை காட்டிலும், அறிகுறியற்ற நோயாளிகளிடம் இருந்து கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளதாக மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளத்தில் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோதும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சில ஆய்வறிக்கைகளின் அடிப்படையிலேயே தான் அந்த கருத்தை தெரிவித்ததாக கூறினார். இருப்பினும், இது தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என Van Kerkhove குறிப்பிட்டார்.

இவரின் இந்த கருத்தை உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Mike Ryan-ம் ஆதரித்துள்ளார். இது தொடர்பான விவாதத்தை தாங்கள் வரவேற்பதாகவும், சரியான வார்த்தைகளை பயன்படுத்தாததால் தங்கள் கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: coronavirusnewsjWHO
Previous Post

சென்னையில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது!

Next Post

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க சீரிய நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு!!

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க சீரிய நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு!!

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க சீரிய நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு!!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version