News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வறட்சியை போக்கும் 'சரபங்கா' திட்டம்

Web Team by Web Team
March 4, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
வறட்சியை போக்கும் 'சரபங்கா' திட்டம்
Share on FacebookShare on Twitter

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரைக் கொண்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை நிரப்பும் சரபங்கா திட்டத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு, குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டு, மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் போது திறந்து விடக்கூடிய உபரி நீரானது, வீணாக கடலில் கலக்கிறது. அவ்வாறு வீணாகும் நீரை, ஏரி, குளங்களில் நிரப்பி விவசாயம் செழிக்க “சரபங்கா நீரேற்று பாசன திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம், சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் எண்ணம் நிறைவேற உள்ளது. இத்திட்டத்தால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. அந்த பயன்களை தற்போது பார்க்கலாம்…

எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

சேலம் மாவட்டத்தில், 37 ஏரிகளும், எம்.கள்ளிப்பட்டியில் 67 ஏரிகளும், 4238 ஏக்கர் நிலங்கள் இதனால் பயனடையும்.

555 கன அடி உபரி நீர் விவசாய ஏரிகளுக்கும், குளங்களுக்கும் திருப்பி விடப்பட உள்ளது.

மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் தாராளமாக கிடைக்கும்.

விவசாயிகள் தங்களுக்கு ஏதுவான சூழல்களில் சாகுபடி செய்ய எளிமையாக இருக்கும்.

ஏரிகளில் நீரை நிரப்புவதால், நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

ஏரி குளங்களில் நீரை தேக்குவதால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது தவிர்க்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி, மேச்சேரி, வனவாசி, ஜலகண்டபுரம், கொங்கனாபுரம், மகுடஞ்சாவடி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் மூலமாக நிரப்பப்பட உள்ளன.

இதே போல பிற மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்தி, அந்தந்த மாவட்ட ஏரி, குளங்களை உபரி நீர் மூலமாக நிரப்பினால், கோடைகாலத்தில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை முழுமையாக தவிர்க்க முடியும் என்பது, சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல், அருகில் உள்ள மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: சரபங்கா திட்டம்
Previous Post

சரபங்கா திட்டத்திற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

Next Post

பிளாஸ்டிக் தடை குறித்த தமிழக அரசின் மேலும் ஒரு நடவடிக்கை

Related Posts

திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றும் அரசு அதிமுக அரசு இல்லை: முதல்வர்
TopNews

திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றும் அரசு அதிமுக அரசு இல்லை: முதல்வர்

March 5, 2020
'சரபங்கா' நீரேற்ற திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
TopNews

'சரபங்கா' நீரேற்ற திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

March 4, 2020
சரபங்கா திட்டத்திற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
TopNews

சரபங்கா திட்டத்திற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

March 4, 2020
Next Post
பிளாஸ்டிக் தடை குறித்த தமிழக அரசின் மேலும் ஒரு நடவடிக்கை

பிளாஸ்டிக் தடை குறித்த தமிழக அரசின் மேலும் ஒரு நடவடிக்கை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version