காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது கண்டிக்கத்தக்கது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Discussion about this post