பலத்த மழையால், கெலவரப்பள்ளி அணைக்கு 986 கனஅடி நீர்வரத்து

கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 986 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நந்திமலை, பெங்களூர் ஆகிய இடங்களில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று வினாடிக்கு ஆயிரத்து 48 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 986 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 44 அடி உயரமுள்ள இந்த அணையில் 42 அடிக்குத் தண்ணீர் உள்ளதால், அணைக்கு வரும் 986 கனஅடிநீரும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து கிருஷ்ணகிரி அணைக்கு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version