ஸ்ரீ முனியாண்டிசுவாமி கோவிலில் 88வது பிரியாணி திருவிழா !

மதுரை மாவட்டம் திருமங்கலம், வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற 88வது ஆண்டு பிரியாணி திருவிழாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஆண்டு தோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து சுவாமியை வழிபட்டனர். விழாவில் 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் சுவாமிக்கு பலியிடப்பட்டு பிரியாணி தாயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Exit mobile version