8 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் திருத்தப்பணிகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுப் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாக்காளர் திருத்தப் பணிகள் தொடர்பாக 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு, சென்னை ரிப்பன் மாளிகை அருகே உள்ள அம்மா அரங்கத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதில், சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். இதில், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Exit mobile version