முதல் முறையாக வாக்குப்பதிவு செய்யவுள்ள குடும்பத்தினர்

முதல் முறையாக வாக்குப்பதிவு செய்யவுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வாக்குப்பதிவு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் முதல் முறையாக வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கொத்தடிமைகளாக இருந்த இவர்களை மீட்டனர். வாக்களிப்பது என்பது என்னவென்று தெரியாமலேயே இருந்த இக்குடும்பத்தினருக்கு, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து விளக்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version