கடலூர் அருகே இளம்பெண்ணை அடித்துக்கொலை செய்த வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
கடலூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த விஜயா என்பவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கலியமூர்த்தி என்பவருக்கும் கழிவு நீர் செல்வதில் தகறாரு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகறாரில் கலியமூர்த்தி குடும்பத்தினரால் விஜயா அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் கலியமூர்த்தி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தியது
Discussion about this post