கெலவரப்பள்ளி அணைக்கு 4-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நான்காவது நாளாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கெலவரப்பள்ளி அணை. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு 4-வது நாளாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடியில் 41.98 அடிக்கு நீர் உள்ளது. நீர்வரத்து 506 கனஅடியாக அதிகரித்துளது.

கர்நாடக பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், கெலவரப்பள்ளி சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version