மறுவாக்குபதிவு கோரப்பட்ட 46 வாக்குச்சாவடிகளில் 3 வாக்குச் சாவடிகளில் மட்டுமே மறு தேர்தல் நடத்தப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மீதமுள்ள 43 வாக்குச் சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான வாக்குகளை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post