தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக நாளை முதல் 4,207 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளிப் பண்டிகை முடிந்து தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னை திரும்புவதற்காக, நாளை முதல் மூன்று நாட்களுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 207 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளித் திருநாளையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சென்னை உள்பட பிற நகரங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 நாட்களில் 12 ஆயிரத்து 850 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. நேற்று மட்டும் ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் உள்பட 3 ஆயிரத்து 975 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று தீபாவளிப் பண்டிகை முடிவடைந்து நாளை முதல் சென்னை திரும்பும் மக்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு மொத்தம் 4 ஆயிரத்து 207 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version