இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக 4 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர், அவர்களது விசைப் படகையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் கடற்பகுதியில் அத்துமீறி நுழைவதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். தமிழகத்தின் நீண்டகால பிரச்சினையாக உள்ள இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கச்சத்தீவு அருகே இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version