திருடு போன 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு !

சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 2 தினங்களுக்கு முன்பு இந்தக் கோவிலில் இருந்து வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு ஐம்பொன் சிலைகள் காணாமல் போயின.

இதுகுறித்து, காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டது. இந்தநிலையில் திருடு போன சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் இருந்து மீட்கப்பட்டன.

சாலையோரம் வீசப்பட்டிருந்த 4 சிலைகளையும் போலீசார் கைப்பற்றினர். மீட்கப்பட்ட 4 சிலைகளும் தேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version