ஆட்சிக்கு எதிராக பேசிய 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

ஆட்சிக்கு எதிராக பேசிய 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகரிடம் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகரை சந்தித்த அமைச்சர் மற்றும் கொறடா, விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகியோர் மீது, ஆட்சிக்கு எதிராக பேசிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர்கள் 3 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, மூன்று எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version