தடகளத் தமிழர்கள்: இந்திய ஒலிம்பிக் அணியில் மூன்று தமிழக வீராங்கனைகள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனைகளான தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான இந்திய தடகள அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 போ கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ, ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ, கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிா் ஆகியோா் பங்குபெற உள்ளார்கள்.

இதில்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

 

Exit mobile version