சூடான் விபத்து :நாகையை சேர்ந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை

சூடான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நாகையை சேர்ந்த ராமகிருஷ்ணனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூடான் தலைநகர் கார்டோமில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 18 இந்தியர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், உயிரிழந்த 3 தமிழர்களில் ஒருவரான நாகை மாவட்டம் ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சூடான் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். இந்தநிலையில், செராமிக் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி, ராமகிருஷ்ணன் உயிரிழந்த செய்தியை அறிந்த குடும்பத்தினர், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version