கொரோனா பயம்: காய்ச்சலுக்காக தூக்குப்போட்டு குடும்பமே தற்கொலை

காய்ச்சல் காரணமாக சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் இல்லாததால் வீட்டில் இருந்து வந்ததாகவும், 2013இல் நாகேஸ்வரிக்கு திருமணம் செய்து கொடுத்ததாகவும், திருமணத்திற்கு பிறகு கணவருடன் ஒரு மாத காலம் மட்டுமே வசித்து வந்ததாகவும், பிறகு பெற்றோருடன் அம்பத்தூரில் வசித்து வந்த நிலையில் மூவரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் மூவரும் கொரோனா காலகட்டம் என்பதால் தனிமையில் இருந்ததால் காய்ச்சல் இருக்கும் போது இருவருக்கும் கடுமையான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட மூன்று உடல்களையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொரோனா காலகட்டத்தில் மாநகராட்சி வீடுகளில் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்காததே இது போன்ற தற்கொலைக்கு காரணம் என்ற குற்றம் சாட்டியுள்றனர்.

Exit mobile version