News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ரெம்டெசிவிர் பெற, நூதன மோசடி; 3 பேர் கைது

Web Team by Web Team
May 11, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ரெம்டெசிவிர் பெற, நூதன மோசடி; 3 பேர் கைது
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்றால் உயிரிழந்த நோயாளிகளின் மருந்து சீட்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயன்ற 3 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதைப் பயன்படுத்தி சமூக விரோத கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனைத் தடுக்கும் முயற்சியில், சென்னை போலீசார் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்தை வாங்குவதற்காக அடுத்தடுதது வரிசையில் நின்று கொண்டு இருந்த மூன்று பேரின் விவரங்களை, மருந்து கவுண்டரில் உள்ள மருந்து வழங்கும் அதிகாரிகள் சோதனை செய்தபோது, நோயாளிகளின் விவரங்கள் அனைத்துமே ஒரே மாதிரியாக செல்வம் என்ற பெயரில் இருந்தது தெரியவந்தது.

மேலும், தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவரின் மருந்து சீட்டும் இருந்ததால் மருந்து வழங்கும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் மருத்துவரை தொடர்பு கொண்டு அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

அப்போது செல்வம் என்ற நோயாளி கடந்த 7 ஆம் தேதியே கொரோனாவால் மரணமடைந்த தகவலை சம்பந்தப்பட்ட மருத்துவர் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கீழ்பாக்கம் மருந்துவ அதிகாரிகள் உடனடியாக கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை மாதவரத்தை சேர்ந்த சதீஷ், செல்வகுமார் மற்றும் அயனாவரத்தை சேர்ந்த கிறிஸ்டிபால் என்பது தெரியவந்தது.

மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த நோயாளியின் ஆதார் அட்டை மற்றும் அவருக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட மருந்துச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் எப்படி கிடைத்தது? பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற தனியார் மருத்துவர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள் என 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதனை கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் கும்பலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது.

Tags: #COVID19corona second wavenewsjRemdesivir
Previous Post

தமிழ்நாட்டில் அவசர சிகிச்சை கிடைக்காமல், உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது

Next Post

உடல்களை எரியூட்டவும் காத்துக்கிடக்கும் அவலம் ; மயானத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் துயரம்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
உடல்களை எரியூட்டவும் காத்துக்கிடக்கும் அவலம் ; மயானத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் துயரம்

உடல்களை எரியூட்டவும் காத்துக்கிடக்கும் அவலம் ; மயானத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் துயரம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version