3 ஆயிரம் மாணவர்களுக்கு கணினி பயிற்சி – அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்

3 ஆயிரம் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு கணினி பயிற்சி வகுப்புகளை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில், தமிழக அரசும் தனியார் அமைப்பும் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கணினி பயிற்சி வகுப்பை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்பயிற்சி வகுப்பின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் 3 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள் என அவர் கூறினார்.

இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version