குறை தீர்வு முகாமில் அமைச்சர் ஜெயகுமார் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற குறை தீர்வு முகாமில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, முதியோர் ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியம், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் அளித்தனர். கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Exit mobile version